கொளத்தூர் மணிக்கு 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் 2 வழக்குகளில்நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்த வழக்கு மற்றும் பாலாறு குண்டு வெடிப்பு வழக்கு ஆகியஇரண்டு வழக்குகளில்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றையும் சேர்த்து கர்நாடக அரசு மணி மீது மொத்தம் ஐந்து வழக்குகளைத் தொடர்ந்திருந்தது.

ஆனால் சமீபத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்தி வீரப்பன் விதித்த நிபந்தனையின் பேரில்மூன்று வழக்குகளில் மணிக்கு ஜாமீன் கிடைக்க கர்நாடக அரசு உதவியது.

இருந்தாலும் மற்ற இரண்டு வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலா தீர்ப்பளித்தார்.அவர் தன் தீர்ப்பில்,

ஜாமீன் தொகையாக ரூ.1 லட்சம் பணத்தை கொளத்தூர் மணி கட்ட வேண்டும். மேலும் அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் அளிக்க வேண்டும்.

மேலும் 10 நாட்களுக்கு ஒரு முறை அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டும்.

சாட்சிகளை மிரட்டுவது உள்பட அவர்களுக்கு எந்தத் தொல்லையையும் அவர் கொடுக்கக் கூடாது என்றுஉத்தரவிட்டார் நீதிபதி பக்தவச்சலா.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+