For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன மழையால் நிலச் சரிவு: ஊட்டி மலை ரயில் நிறுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

மேட்டுப்பாளையம்:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச் சரிவின் காரணமாக ஊட்டி மலை ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக நன்றாக மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக கோயம்புத்தூர்அருகே ரயில் தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஊட்டி மலைப் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவுஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் மண் சரிவு காரணமாக தண்டவாளங்கள் அடைபட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை 7.10மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி நோக்கி புளூமவுண்டன் ரயில் கிளம்பியது.

ஆனால் அடர்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளம் மண் சரிவு காரணமாகமூடப்பட்டுக் கிடந்ததைத் தொடர்ந்து அதற்கு மேல் செல்ல முடியாமல் ரயில் நின்று விட்டது.

இதையடுத்து காலை 10 மணிக்கு அது மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே திரும்பி விட்டது. அங்கிருந்து ரயில்பயணிகள் அனைவரும் சிறப்பு பஸ்கள் மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே மண் சரிவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களில் நிலைமை சீராகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X