For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எண்ணெய் கிணறுகளுக்கு ஈராக் தீ வைப்பு: இருண்டது குவைத்

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாத்:

தனது நாட்டுக்குள் முன்னேறி வரும் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளைத் தடுக்க தென் பகுதியில் உள்ள சுமார் 15 எண்ணெய்க்கிணறுகளுக்கு ஈராக் தீ வைத்துள்ளது.

இதனால் ஈராக்கின் தென் பகுதியிலும் குவைத் முழுவதும் கரும் புகை மூட்டம் பரவியுள்ளது. இதனால் குவைத் நாடே இருளடித்துப்போனது. நகர முழுவதும் புகை பரவியுள்ளதால் அனைவரும் இருமல், கண் எரிச்சல் போன்ற தொந்தரவுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதை நாஸா வெளியிட்டுள்ள செயற்கைக் கோள் படங்களும் உறுதி செய்துள்ளன.

இதற்கிடையே ஈராக்கில் நுழைந்துள்ள பிரிட்டிஷ் படைகள் உம் கஸ்ஸர் நகரைக் கைப்பற்றியதுடன் அருகே போ வளைகுடாவில் உள்ளமுக்கியமான எணணெய் கிடங்கையும் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் 30 கிடங்குகள் வரை தீப்பற்றி எரிவதாக பிரிட்டன் படையினர் கூறியுள்ளனர்.

இதற்கிடையே குவைத் மீது இன்று ஈராக் 3 ஸ்கட் ஏவுகணைகளை ஏவியது. இவற்றை குவைத் பேட்ரியாட் ஏவுகணைகளை வீசித் தாக்கிநடுவானில் அழித்தது.

நகரை இழக்கவில்லை- ஈராக்:

ஈராக்கிய நகர் எதையும் அமெரிக்கா கைப்பற்றவில்லை என அந் நாடு கூறியுள்ளது.

உம் கஸ்ஸர் நகரைக் கைப்பற்றிவிட்டதாக அமெரிக்கர்கள் பொய் சொல்லி வருவதாகவும் அந் நாடு முழுக்க முழுக்க எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றும் ஈராக்கிய தகவல்துறை அமைச்சர் முகம்மத் சகாப் தெரிவித்தார்.

பாக்தாதில் நிருபர்களிடம் பேசிய அவர், அமெரிக்கர்கள் கொலைகாரர்கள் மட்டுமல்ல. பெரிய பொய்யர்கள். ஈராக்கில் தங்கள்சூதாட்டத்தை நடத்தி வரும் கும்பல் அது.

உம் கஸ்ஸர் நகரைப் பிடித்துவிட்டதாக பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர். அந்த நகரம் எங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.அமெரிக்கர்களின் சில டாங்கிகள் பாக்தாத் நோக்கி வந்து கொண்டுள்ளன.

அவர்களை எங்கு வைத்து எப்படித் தாக்குவது என்று எங்களுக்குத் தெரியும். ஈராக்கிய விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் நடத்தியதாக்குதலில் 2 அமெரிக்க ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. இதை அந்தப் பொய்யர்கள் வெளியிலேயே சொல்லவில்லை.

ஈராக்கிய ராணுவத்தினர் என்று சொல்லி பச்சை உடையை அணிவித்து, கையில் வெள்ளைக் கொடியைக கொடுத்து சிலரை நடக்க வைத்துசரணடைவது மாதிரி படம் பிடித்து ஏமாற்றி வருகின்றனர்.

ஈராக் வீரன் யாரும் சரணடையவில்லை. இன்று நாங்கள் ஒரு அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தினோம். அது குவைத் எல்லையில்விழுந்து நொறுங்கியது என்றார் சகாப்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X