சதாம், ஈராக் சொத்துக்கள் முடக்கம்
பாக்தாத்:
அமெரிக்காவிடம் ஈராக் சரணடையாது என அதிபர் சதாம் ஹூசேன் கூறியுள்ளார்.
இன்று ஈராக்கியத் தொலைக் காட்சி மூலம் சதாம் ஹூசேன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
ஊடுருவி வரும் படைகளை ஈராக் எதிர்கொண்டு போரிடும். மக்களும் வீரர்களும் எதையும் சந்திக்கத் தயாராக உள்ளனர். ஈராக்கியவீரர்கள் சரணடைந்து வருவதாக அமெரிக்காவும் பிரிட்டனும் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இது போன்ற புரளிகளால் ஈராக் வீரர்களை முடக்கிவிட முடியாது என்றார்.
ஜோர்டன் டிரைவர் பலி:
இதற்கிடையே நேற்று நடந்த அமெரிக்க ஏவுகணை, விமானத் தாக்குதல்களில் பலியானவர் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த டிரைவர் என்றுதெரியவந்துள்ளது. நேற்று முழுவதும் நடந்த பலத்த தாக்குதல்களில் பல பெண்களும் குழந்தைகளும் காயமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களை ஈராக்கிய அதிகாரிகள் நிருபர்களிடம் காட்டினர்.
ஈராக் சொத்துக்கள் முடக்கம்:
ஈராக் நாட்டின் சர்வதேச சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. அதே போல அதிபர் சதாம் ஹூசேனுக்குச் சொந்தமான சர்வதேசவங்கிக் கணக்குகளை அமெரிக்கா முடக்கியது. இவற்றின் மதிப்பு 1.5 பில்லியன் டாலர்களாகும்.
ஈராக்கியத் தூதர்களை வெளியேற்றிவிட்டு உலகம் முழுவதும் உள்ள அந் நாட்டு சொத்துக்களை முடக்குமாறு அனைத்து நாடுகளுக்கும்அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
-->