ஈராக்கிலேயே தங்கிவிட்ட 15 இந்தியர்கள்

Subscribe to Oneindia Tamil

துபாய்:

ஈராக்கில் இருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேறிவிட்ட நிலையில் கேரளவைச் சேர்ந்த 3 கிருஸ்துவ கன்னியஸ்திரிகளும், 4 இந்தியமாணவர்களும் ஈராக்கிலேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த கன்னியஸ்திரிகள் அன்னை தெரசா சமூக நல அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாக்தாத் நகரில் போரினால் பாதிக்கப்பட்டகுழந்தைகளுக்கான இல்லத்தை நடத்தி வருகின்றனர். வட இந்தியாவைச் சேர்ந்த 4 மாணவர்கள் ஈராக் பல்கலைக்கழகத்தில் இஸ்லாம்குறித்த உயர் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்கள் தவிர 12 இந்தியர்கள் கர்பலா என்ற இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இஸ்லாமிய புனித நகரமான இங்கு வரும்யாத்ரீகர்களுக்கு உதவி செய்யும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களும் இந்தியா திரும்ப மறுத்துவிட்டனர்.

போர் தொடங்க இருந்ததையடுத்து இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேறினர். அப்போது இவர்களையும் வெளியேறுமாறுஇந்திய அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், இவர்கள் வெளியேற மறுத்துவிட்டனர்.

ஈரான் சிறப்பு தூதர் இந்தியா வருகை:

ஈராக் மீதான அமெரிக்கப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அதன் அண்டை நாடான ஈரான் அதிபரின் சிறப்புத் தூதர் இன்று திடீரெனஇந்தியா வந்தார். பிரதமர் வாஜ்பாயுடன் அவர் பேச்சு நடத்த உள்ளார்.

ஈராக்குக்கு சமமாக ஈரானையும் எதிர்த்து வருகிறது அமெரிக்கா. ஆனால், ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்ப்பதில் இந்தியாவும்ஈரானும் இணைந்து செயல்பட்டன. இரு நாடுகளும் பல நூறு கோடி மதிப்புள்ள ஆயுதங்களை நார்த்தர்ன் அலையன்ஸ் படைகளுக்குவழங்கி தலிபான்களை எதிராக போர் நடத்தின.

இதனால் ஈரான்- இந்தியா உறவு வலுப்பட்டது. இப்போது ஈராக்கில் நடந்து வரும் தாக்குதலை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது.

இந் நிலையில் ஈரானிய அதிபர் சையத் முகம்மத் கதாமி தனது சிறப்புத் தூதர் அலி அக்பர் வெலாயதியை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளார்.நேற்றிரவு இந்தியா வந்த அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் என்ன பேசப்பட்டது என்பதைத் தெரிவிக்க இரு தரப்பினரும் மறுத்துவிட்டனர். இன்று அவர் வாஜ்பாயையும் சந்தித்துப் பேசுகிறார்.

37 ஈராக்கியர்கள் படுகாயம்:

இதற்கிடையே இன்று அமெரிக்க விமானங்களும் ஏவுகணைகளும் நடத்திய தாக்குதலில் பாக்தாதில் மட்டும் 37 பேர் பலத்தகாயமடைந்ததாக ஈராக் கூறியுள்ளது.

பெரும்பாலான தாக்குதல்கள் மக்கள் நிறைந்த இடங்களைக் குறி வைத்தே நடந்ததாகவும் ஈராக் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+