குவைத்தை தாண்டி கடலில் விழுந்த ஈராக் ஏவுகணை
குவைத்:
குவைத்தின் மீது ஈராக் தொடர்ந்து ஸ்கட் ரக ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 10 ஸ்கட் ஏவுகணைகள்குவைத்துக்குள் வந்து விழுந்து வெடித்துள்ளன.
இதில் 2 ஏவுகணைகளை மட்டும் அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் விண்ணில் தடுத்து தகர்த்தன.
ஒவ்வொரு முறையும் குவைத் நோக்கி ஏவுகணை வரும்போதும் அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கப்படுகிறது. பெரும்பாலான மக்களும்படையினரும் வீடுகளுக்குள் பதுங்கி ரசாயன ஆயுத முகமூடிகளை அணிந்து கொள்கின்றனர்.
கடலில் விழுந்த ஏவுகணை:
இதற்கிடையே ஈராக் ஏவிய ஏவுகணைகளில் ஒன்று குவைத்தையும் தாண்டிச் சென்று கடலில் விழுந்து வெடித்தது.
குவைத் படைகள் மீது தாக்குதல்:
நேற்று இரவில் குவைத் படைகள் மீது ஈராக்கியப் படைகள் கடுமையான துப்பாக்கித் தாக்குதல்கள் நடத்தின. இதையடுத்து அமெரிக்கப்படைகள் விரைந்து வந்து ஈராக்குக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தின. இத் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் அமெரிக்கப் படைகள்ஈராக்குக்குள் ஊடுருவ ஆரம்பித்துவிட்டன.
-->