இந்தியாவிடம் மன்னிப்பு கோரியது மலேசியா
கோலாலம்பூர்:
சாப்ட்வேர் என்ஜினியர்களை போலீசார் அடித்துத் துன்புறுத்தி, மண்டியிட வைத்து கேவலப்படுத்திய சம்பவம் தொடர்பாக இந்தியாவிடம்மலேசியா மன்னிப்பு கோரியுள்ளது.
கடந்த 9ம் தேதி சட்ட விரோதமாகக் குடியேறிவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி நள்ளிரவில் இந்தியர்களை மலேசியா போலீசார்தாக்கினர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.
இந்தச் சம்பவத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இரு நாட்டு உறவுகளையும் துண்டிக்கப் போவதாக அறிவித்த இந்தியா பலநடவடிக்கைகளையும் எடுத்தது.
இதையடுத்து இந்தியத் தூதரிடம் மலேசிய துணைப் பிரதமர் அப்துல்லா அஹ்மத் படவாய் இன்று நேரில் மன்னிப்பு கோரினார்.
கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதர் வீணா சிக்ரியை நேரில் சந்தித்த அவர், இச் சம்பவத்துக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கோருவதாகத்தெரிவித்தார். மேலும் சம்பவத்தில் தொடர்புடையை போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இனிமேல் இது போன்றசம்பவம் நடக்காது எனவும் உறுதியளித்தார்.
மேலும் இது தொடர்பாக மலேசிய பிரதமர் மகாதிர் முகமதுவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு கண்டனக் கடிதமும்எழுதியிருந்தார். அவருக்கு வருத்தம் தெரிவித்து பதில் அனுப்பப்படும் என இந்தியத் தூதரிடம் படவாய் உறுதியளித்தார்.
வரும் அக்டோபர் மாதம் படவாய் மலேசியப் பிரதமராகப் பதவியேற்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தத்தது.