For Daily Alerts
Just In
தேனியில் மழையோ மழை... வீடுகளில் வெள்ளம்
தேனி:
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது.
தேனி, போடி நாயக்கனூர், பெரியகுளம், காமாட்சிபுரம், வடுகபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து பலத்தமழை பெய்து வருகிறது. காமாட்சிபுரத்தில் அதிக அளவாக 9 செ.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பெரியகுளம் அருகே தாமரைக் குளம் என்ற இடத்தில்மேற்குத் தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள பல வீடுகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் மழை நீர்புகுந்துள்ளது. இதனால் பொது மக்கள் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
தேனியில் கன மழை காரணமாக சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது.
-->
Story first published: Friday, March 21, 2003, 5:30 [IST]