மின் கட்டண உயர்வு: பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு
சென்னை:
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும்போது, மின் கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்க் கட்சிகள்வெளிநடப்பு செய்தன. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவும்வெளிநடப்பு செய்தது.
2003-04ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பொன்னையன் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
ஆனால் அவர் தாக்கல் செய்வதற்கு முன்பே சட்டசபை திமுக தலைவரான அன்பழகன் எழுந்து, மின் கட்டணஉயர்வு மற்றும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது ஆகியவை குறித்து விவாதிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் சபாநாயகர் காளிமுத்து அதற்கு அனுமதி அளிக்க மறுத்தார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும்எழுந்து ஒழுங்கு பிரச்சனையை எழுப்ப முயன்றனர். அவர்களுக்கும் காளிமுத்து அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத்தொடர்ந்து பாமக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியகட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இவர்களுடன் கே.என். லட்சுமணன் தலைமையிலான பாஜக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போதுதான் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இன்று கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். அவர்களைப் பார்த்த முதல்வர்ஜெயலலிதா, என்ன அனைவரும் திராவிடர் கழகத்தில் சேர்ந்து விட்டீர்களா என்று கேட்டபோது, அவையேசிரிப்பலையில் மூழ்கியது.
-->