பாஸ்ரா நகரை தவிர்த்த அமெரிக்க படைகள்: பாக்தாதை நோக்கி முன்னேறுகின்றன
பாக்தாத்:
பாக்தாத் நகரின் மீது அமெரிக்க ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்துகொண்டுள்ளது.
குவைத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்கப் படைகள் நேற்று 150 கி.மீ. தூரம் வரை ஊருவின. பாஸ்ரா நகரைஇந்தப் படைகள் கைப்பற்றிவிட்டு பாக்தாத் நோக்கி அந்தப் படைகள் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பாஸ்ராவை சுற்றிக் கொண்டு அந்தப் படைகள் பாக்தாதை நோக்கி முன்னேறி வருகின்றன. பாஸ்ராநகரில் மிக அதிகமான ஈராக்கிய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இங்கு தாக்குதல் தொடங்கினால் அது பலவாரங்கள் நீடிக்கும் என்று தெரியவந்துள்ளது.
இதனால் போர் பல வாரங்கள் நீடிக்கும். அதற்குள் உலக அளவிலான எதிர்ப்பும் மிக அதிகமாகிவிடும் என்பதால்இந்த நகரைக் கைப்பற்றுவதை இப்போதைக்கு அமெரிக்கா விரும்பவில்லை.
சர்வதேச எதிர்ப்பு காரணமாக போரை மிக வேகமாக முடிக்க வேண்டிய நிலையில் உள்ள அமெரிக்கா முதலில்பாக்தாதைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது. தலைநகர் வீழ்ந்தால் பாஸ்ராவில் உள்ள ஈராக்கியப் படைகள்தாங்களாகவே சரணைடைந்துவிடும் என அமெரிக்கா கருதுகிறது.
இதனால் ஈராக்கிய வீரர்களின் கடும் எதிர்தாக்குதலை சந்தித்த வண்ணம் மிக மெதுவாகவே அமெரிக்கப் படைகள்பாக்தாத் நோக்கி முன்னேறி வருகின்றன.
தெற்குப் பகுதியில் இருந்து அமெரிக்கப் படைகள் பாக்தாதை நோக்கி சென்றவண்ணம் உள்ளன. அதே நேரத்தில்பிரிட்டிஷ் படைகள் மேற்குப் பகுதியை சுற்றிக் கொண்டு பாக்தாத் நோக்கி செல்கின்றன.
அதே போல ஈராக்கின் வடக்குப் பகுதியில் இருந்தும் விரைவில் குர்து இன போராளிகளுடன் சேர்ந்து அமெரிக்கப்படைகள் பாக்தாத் நோக்கி முன்னேறும் என்று தெரிகிறது.
இதற்கிடையே குவைத்தில் உள்ள அமெரிக்க படை முகாமின் மீது ஈராக் நேற்றிரவு ஏவுகணையை வீசித் தாக்கியது.இந்த ஏவுகணையை பேட்ரியட் ஏவுகணைகள் மூலம் அமெரிக்கப் படைகள் நடுவானில் தகர்த்தன.
-->