குமரியில் ரூ.1.5 லட்சம் செலவில் டெலஸ்கோப்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தைப் பொதுமக்கள் கண்டு களிப்பதற்காகரூ.1.50 லட்சம் செலவில் நவீன தொலைநோக்கி வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் அரிய காட்சியைத் தவிர, சூரிய உதயம் மற்றும்அஸ்தமனம் ஆகியவற்றைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் கூடுவர்.
சூரிய உதயத்தைக் காண்பதற்காக தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் கடற்கரையில் காத்துக்கிடப்பது வழக்கம். அதே போல, சூரிய அஸ்தமனத்தின் அழகைப் பார்க்கவும் மாலையில்ஆயிரக்கணக்கான மக்கள் அலைமோதிக் கொண்டிருப்பார்கள்.
இந்நிலையில் சூர்ய உதயம் மற்றும் அஸ்தமனத்தை மிகவும் ரசித்துப் பார்க்கும் வகையில்பொதுமக்களுக்காக நவீன தொலைநோக்கி ஒன்று கன்னியாகுமரி கடற்கரையில்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம் சார்பில் நிறுவப்பட்டுள்ள இந்தத் தொலைநோக்கியின் திறப்புவிழாவில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ரூ.1.50 லட்சம் செலவில் இந்தத் தொலைநோக்கி வைக்கப்பட்டுள்ளது.
-->