சுங்க அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை: ரூ.44 லட்சம் ஆவணங்கள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் சுங்க அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. நடத்திய அதிரடி சோதனையில் ரூ.44 லட்சம்மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் சுமார் 100 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனைநடத்தினர்.
சென்னையிலும் சுங்க அதிகாரி எஸ். ராமுவின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனைநடத்தினர்.
சுங்கம் மற்றும் உற்பத்தி வரித் துறை அதிகாரியான அவருடைய வீட்டிலிருந்து சுமார் ரூ.44 லட்சம்மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வருமானத்துக்கு அதிகமாகஇந்தச் சொத்துக்களை அவர் சேர்த்திருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
இதே போல் டெல்லி, ஹைதராபாத், கெளஹாத்தி, உள்ளிட்ட இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள்சோதனை நடத்தினர். மொத்தம் சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம், ஆவணங்கள்,இரண்டு கைத்துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சோதனைகளைத் தொடர்ந்து முக்கிய அதிகாரிகள் மீது 32 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
-->












Click it and Unblock the Notifications