For Daily Alerts
Just In
அமெரிக்காவை கண்டித்து தீர்மானமா?- தமிழக அரசு மெளனம்
சென்னை:
ஈராக் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்காவை எதிர்த்து கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும் என்று தமிழக சட்டசபையில் இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின்உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கேள்வி நேரத்திற்குப் பிறகு எழுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான ஹேமச்சந்திரன்அமெரிக்காவின் செயலைக் கண்டித்து சட்டசபையில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும் என்றார்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் தலைவரான பழனிச்சாமியும் இதே கோரிக்கையை விடுத்தார்.
இருப்பினும் இது தொடர்பாக அரசுத் தரப்பில் எந்த உறுதி மொழியும் அளிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து மற்ற கேள்விகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
-->
Comments
Story first published: Tuesday, March 11, 2003, 5:30 [IST]