For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"முதல்வரை சந்திக்க முடியவில்லையே": விஷம் குடித்த ஊனமுற்ற இளைஞர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க வந்தவர், அவரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால்பூச்சி மருந்து குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர்மாரிமுத்து.

உடல் ஊனமுற்ற இளைஞரான இவர் ஜெயலலிதாவிடம் உதவி கேட்பதற்காக சென்னை-போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் இங்கு முதல்வரிடம் மனுகொடுக்க முடியாது என்று கூறி பாதுகாவலர்கள் மாரிமுத்துவை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.

இதனால் மனம் உடைந்து போன மாரிமுத்து, தனது பையில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக்குடித்துள்ளார்.

மயங்கி விழுந்த அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பாதுகாவலர்கள்அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மாரிமுத்து இருப்பதாக டாக்டர்கள்தெரிவித்தனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X