எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் மீது தனுஷ்கோடி ஆதித்தன் அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.- ஜானகி ராமச்சந்திரனின் வளர்ப்பு மகன் சுரேந்திரன் மீது மானநஷ்டவழக்கு தொடரப் போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று நிருபர்களிடம் தனுஷ்கோடி ஆதித்தன் கூறுகையில்,
சென்னை சி.ஐ.டி. நகர் பகுதியில் உள்ள வீட்டை நான் ஆக்கிரமித்துள்ளதாக சுரேந்திரன்கூறியுள்ளார். இது அநியாயமான, அப்பட்டமான பொய்.
இது போன்ற புகார் கூறுபவர்களுக்குப் பாடம் புகட்ட நான் விரும்புகிறேன். எனவே சுரேந்திரன் மீதுமான நஷ்ட வழக்குப் தொடர முடிவு செய்துள்ளேன்.
ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடருவேன் என்று கூறினார் தனுஷ்கோடி ஆதித்தன்.
-->












Click it and Unblock the Notifications