அமெரிக்க ராணுவத்தை தாக்கும் ஈராக் தற்கொலை படைகள்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளை தங்களது தற்கொலைப் படைப் பிரிவுகள் தாக்க ஆரம்பித்துள்ளதாக ஈராக்கூறியுள்ளது.

இந்தப் படைகளின் தாக்குதலில் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டு வருவதாகஈராக்கிய ராணுவச் செய்தியாளர் அந் நாட்டு டிவியில் கூறினார். விமானங்கள் நடத்திய தாக்குதலால் ஈராக்கியடிவி நிலையம் சிதறடிக்கப்பட்டது.

இதனால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. ஆனால், நேற்று இரவு மீண்டும் தனது ஒளிபரப்பை ஈராக் தொடங்கியது.

அதில் பேசிய ராணுவச் செய்தித் தொடர்பாளர், நஜாபில் அமெரிக்கப் படைகளுக்கு பெரும் உயிர்ச் சேதம்ஏற்பட்டுள்ளது. ஈராக்கிய தற்கொலைப் படைகளே இதற்குக் காரணம். பாஸ்ராவில் இன்னொரு பிரிட்டிஷ்ஹெலிகாப்டரையும் இந்தப் படை வீழ்த்தியுள்ளது.

மேலும் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளின் 11 டாங்க்குகள், 12 சப்ளை வாகனங்களையும் தகர்த்துள்ளோம்என்றார்.

நஜாப் நகரில் 1,000 ஈராக்கிய வீரர்களைக் கொன்றுள்ளதாக அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன.

இதற்கிடையே அமெரிக்காவுக்கு ஆதரவான குர்து இனப் போராளிகளைத் தாக்க ஈராக்கிய தற்கொலைப் படைகள்வடக்கு நோக்கி முன்னேறி வருகின்றன. இதையடுத்து அமெரிக்க உதவியை குர்து இன போராளிகள்கோரியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க விமானங்கள் இந்த ஈராக்கிய தற்கொலைப் படையினர் மறைந்துள்ள பகுதிகளில்குண்டு வீச்சுத் தாக்குதலை தொடங்கியுள்ளன. குறிப்பாக சுலைமானியா, கிர்குக் ஆகிய இடங்களில் இத்தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+