ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட அமெரிக்க ராணுவ பிரிவுகள்
நசிரியா:
ஈராக்கின் நசிரியா நகர் அருகே அமெரிக்க மெரைன் படைப் பிரிவின் மீது கேவல்ரி படைப் பிரிவு தவறுதலாகத்தாக்குதல் நடத்தியது. இதில் 37 அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது.
மார்ட்டர் ரக துப்பாக்கிகளாலும், பீரங்கிகளாலும் இந்தத் தாக்குதலும் பதில் தாக்குதலும் நடந்தன. று தரப்பினரும்தங்களை ஈராக்கியப் படைகள் தாக்குவதாக நினைத்து இத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கத்தாரில் உள்ள அமெரிக்கப் படைகளின் மத்தியத்தலைமையகம் கூறியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து பாக்தாத் நகரில் இன்றும் குண்டு மழை பொழிந்துவருகின்றன. இந் நிலையில் நஜாப் நகரை மீண்டும் அமெரிக்கப் படைகளிடம் இருந்து கைப்பற்ற கர்பலாவில்உள்ள தனது படைகளை சிறு குழுக்களாக ஈராக் நஜாப் நோக்கி அனுப்பி வருவதாக அமெரிக்க ராணுவ உளவுப்பிரிவு கூறியுள்ளது.
இந் நிலையில் நசிரியா நகர் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 200 வீடுகள் உடைந்துள்ளதாகவும்500க்கும் மேற்பட்ட பொது மக்கள் காயமடைந்திருப்பதாகவும் ஈராக்கிய ராணுவம் கூறியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications