ஏப்ரல் 16ம் தேதி கண்ணகி கோவில் திருவிழா
தேனி:
தமிழக, கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் வரும் ஏப்ரல் 16ம் தேதி நடக்கவுள்ள விழாதொடர்பாக தமிழகத்தின் தேனி மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் ஏப்ரல் 1ம் தேதிபேச்சு நடத்தவுள்ளனர்.
தேனி மாவட்ட எல்லையில் கேரளாவிற்குள் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்ணகிகோவில் உள்ளது.
கோவில் அமைந்துள்ள இடம் தமிழகத்திற்குச் சொந்தமானதா, கேரளாவிற்குச் சொந்தமானதாஎன்பதில் நீண்ட காலமாகப் பிரச்சினை உள்ளது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி பூஜை நடைபெறும். ஆனால் அங்கு செல்லும்தமிழக பக்தர்களுக்கு கேரள போலீஸார் எப்போதும் கடுமையான நெருக்கடி கொடுப்பார்கள்.
பலமுறை தமிழக பக்தர்கள் மீது தாக்குதலும் நடந்துள்ளது. பல்வேறு அவமானங்களுக்கிடையேகண்ணகி கோவில் திருவிழாவில் ஆண்டுதோறும் தமிழர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆண்டு விழா குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் ஏப்ரல் 1ம் தேதி தேனியில்பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
-->