தீவிரவாதி ராஜாராமனின் உடலைப் பெற உறவினர்கள் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

தேனி:

சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் விடுதலைப் படைத் தலைவர் ராஜாராமனின் உடலைப்பெற்றுக் கொள்ள அவருடைய உறவினர்கள் மறுத்து விட்டனர்.

தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தில்தான் ராஜாராமனின் உறவினர்கள், குடும்பத்தினர்வசித்து வருகின்றனர். அவருடைய சகோதரர் சுப்புராஜ் கூறுகையில்,

சென்னைக்குச் சென்று ராஜாராமனின் உடலைப் பெற்று, அடக்கம் செய்வதற்கு எங்களிடம் போதியபண வசதி இல்லை.

எனவே நாங்கள் சென்னை சென்று அவருடைய உடலைப் பெற மாட்டோம். ஆனால் உடலைஇங்கே கொண்டு வந்து கொடுத்தால் நாங்கள் பெற்றுக் கொள்வோம் என்றார்.

இதேபோல ராஜாராமனுடன் சேர்ந்து உயிரிழந்த சரவணனின் குடும்பத்தாரும் நிதிப் பிரச்சினைகாரணமாக சென்னை சென்று உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.சரவணனின் குடும்பத்தினர் புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்கள்.

ராஜாராமன் கொலை- 6 தனிப் படைகள்:

இதற்கிடையே ராஜாரமன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தப்பியோடிய கும்பலைப்பிடிக்க 6 தனிப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் பேசுகையில், ராஜாராமன் சென்னை மத்திய சிறையில்இருந்தபோது, சில புது நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.

அவர்கள் மூலம் மிகப் பெரிய அளவிலான சதித் திட்டங்களை ராஜாராமன் தீட்டியிருந்ததாகத்தகவல் கிடைத்துள்ளது.

இதன் காரணமாகவே ராஜாராமனைத் தப்பிக்க வைக்க முயற்சி நடந்தது. அந்த முயற்சியின்போதுதான் ராஜாராமனும் சரவணனும் இறந்துள்ளனர்.

குவாலிஸ் காரில் மூன்று பேர் வரை இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களைப் பிடிக்கமொத்தம் ஆறு தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு படை பெங்களூருக்குவிரைந்துள்ளது.

இது தவிர மதுரை, பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மற்ற தனிப்படையினர் சென்று விசாரணை மேற்கொள்வார்கள் என்றார் விஜயகுமார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+