For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெ. வீடு அருகே விஷம் குடித்த ஊனமுற்ற வாலிபர் சாவு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு அருகே விஷம் குடித்த ஊனமுற்றவாலிபர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.
உடல் ஊனற்றவரான இவர் சென்னை வந்தார். போயஸ் தோட்டத்திற்கு வந்த அவர் முதல்வரிடம்உதவி கோரி மனு கொடுக்க முயற்சித்தார்.
ஆனால் இங்கு மனுக்கள் வாங்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்படவே, ஏமாற்றம் அடைந்தமாரிமுத்து விஷம் குடித்தார்.
உடனடியாக அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாகஇறந்தார்.
-->
Story first published: Thursday, March 27, 2003, 5:30 [IST]