ஈரோடு: டேங்கர் ரயிலுடன் மோதிய சரக்கு ரயில்
ஈரோடு:
ஈரோடு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 2டேங்கர் பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் 7 மணி நேரத்திற்கு அந்தப் பகுதியில் நேரப்பாதிப்பை ஏற்படுத்தின.
காட்பாடி ரயில் நிலையம் அருகே நேற்று காலை சரக்கு ரயில் தடம் புரண்டு அதிலிருந்த 10பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விழுந்தன. இதனால் சென்னை-பெங்களூர் மார்க்கத்தில்எட்டு மணி நேரத்திற்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தில் மற்றொரு விபத்து நடந்துள்ளது. நேற்று இரவு டேங்கர்ரயில் ஒன்று அந்த ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது.
அப்போது அதே பாதையில் ஒரு சரக்கு ரயிலும் வந்து விட்டது. கடைசி நேரத்தில்தான் அதன்டிரைவரும் இதைக் கவனித்தார். ஆனால் அவர் பிரேக் போட்டு ரயிலை நிறுத்துவதற்குள் அந்த ரயில்டேங்கர் ரயில் மீது மோதி விட்டது.
இதில் டேங்கர் ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டுக் கீழே இறங்கின.
இதன் காரணமாக இந்தப் பாதையில் நேற்று இரவு சுமார் ஏழு மணி நேரத்திற்கு போக்குவரத்துபாதிக்கப்பட்டது. இருந்தாலும் சரக்கு ரயில் போக்குவரத்திற்கான பகுதியில்தான் பெட்டிகள் கழன்றுவிழுந்திருந்ததால், பயணிகள் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.
-->