ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்: சட்டசபையில் விவாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் என்றாலே பெண்களைத்தான் முக்கிய இலக்காக அரசுகருதுகிறது.

ஆனால் ஆண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வது தொடர்பாக தீவிர பிரசாரம் செய்தால் என்னஎன்று சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி கேள்வி எழுப்பினார்.

பட்ஜெட் மீதான விவாதத்தின்போது அவர் பேசுகையில்,

குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன்களுக்கு பெண்களைத்தான் அதிக அளவில் கூட்டி வருகிறார்கள்.ஆனால், ஆண்களுக்கு அரசு அழைப்பு விடுவதில்லை. ஆண்களுக்கான கருத்தடை முறையானவாசக்டமியை பிரபலப்படுத்துவதற்கு அரசு ஏன்முயற்சிக்கக்கூடாது என்றார்.

இதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை, ஆண்களுக்கு வாசக்டமி அறுவைசிகிச்சை செய்வது மிகவும் எளிதானது. ஆனால் அவர்கள் அதிகம் முன் வருவதில்லை. கடந்தஆண்டைவிட இந்த ஆண்டு 4,000 குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன்கள் அதிகம்செய்யப்பட்டுள்ளன என்றார்.

குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்த பிறகும் பலருக்குக் குழந்தைகள் பிறப்பது குறித்துஇந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

இது மிகவும் அரிதானது. 1000ல் ஒருவருக்கு 10,000ல் ஒருவருக்குத்தான் இப்படிப் பிறக்கும் எனஅமைச்சர் பதிலளித்தார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+