வடக்கு ஈராக்கில் நுழைய மாட்டோம்: துருக்கி உறுதி
அங்காரா:
அவசியம் ஏற்பட்டால் தவிர ஈராக்கின் வடக்குப் பகுதிக்குள் நுழைய மாட்டோம் என்றுஅமெரிக்காவுக்கு துருக்கி உத்தரவாதம் அளித்துள்ளது.
வடக்கு ஈராக்கில் குர்திஸ் இன மக்கள் கிட்டத்தட்ட தனியாகவே ஆட்சி நடத்தி வருகின்றனர்.அவர்கள் தற்போது அமெரிக்காவுக்கு ஆதரவாக ஈராக் படையினர் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் ஈராக்கின் எண்ணெய் நகரம் என்று அழைக்கப்படும் கிர்குக் நகரை குர்திஸ் மக்கள்சுற்றி வளைத்துள்ளனர்.
ஆனால் இந்நகரை குர்திஸ் இனத்தவர் கைப்பற்றினால் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றதுருக்கி எச்சரித்துள்ளது.
இதையடுத்து அமெரிக்கா-துருக்கி-குர்திஸ் ஆகியோருக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கிர்குக் நகரைக் கைப்பற்ற மாட்டோம் என்று குர்திஸ் மக்கள் உறுதி அளித்துள்ளனர். அதுபோல்வடக்கு ஈராக்கினுள் நுழைந்து தாக்குதல் நடத்த மாட்டோம் என்று துருக்கியும் உறுதி அளித்துள்ளது.
இதற்கிடையே குர்திஸ் மக்கள் வசிக்கும் கலாக் நகரின் மீது ஈராக் படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன.
""பிரிட்டிஷ் படை திரும்ப வேண்டும்"":
இதற்கிடையே பிரிட்டிஷ் படைகள் போரைக் கைவிட்டு நாடு திரும்ப வேண்டும் என்று போரைஎதிர்த்து ராஜினாமா செய்த அந்நாட்டு அமைச்சரான ராபின் குக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேவையே இல்லாத இந்தப் போரினால் பிரிட்டிஷ் படையினர் மேலும் அநியாயமாகக்கொல்லப்படுவதற்குள் அவர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-->