அயோத்தியில் வழிபாடு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு
டெல்லி:
அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்தில் மத வழிபாடுகள் நடத்த அனுமதிக்கக் கோரிமத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
அயோத்தியில் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சர்ச்சைக்கு அப்பாற்பட்ட67 ஏக்கர் நிலத்தில் எந்தவிதமான மத வழிபாடும் நடைபெறக் கூடாது என்று கடந்த ஆண்டு மார்ச்மாதம் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
ஆனால் சர்ச்சைக்குரிய இடத்தை விட்டு விட்டு சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்தை விடுவிக்கவேண்டும் என்றும் அங்கு மத வழிபாடு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்ளவேண்டும் என்றும் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
சர்ச்சைக்கு அப்பாற்பட்ட அந்த இடத்தைத் திரும்பப் பெற்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிடம்தரவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. நீதிபதி ராஜேந்திர பாபுதலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் தன் தீர்ப்பில்,
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தவழக்கு முடியும் வரை மசூதி இடிக்கப்பட்ட இடம், அதைச் சுற்றியுள்ள நிலம் ஆகியவை மத்தியஅரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அங்கு யாரையும் வழிபாடு நடத்த அனுமதிக்கக்கூடாது. இது தொடர்பாக கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்ந்து அமலில் இருக்கவேண்டும்.
இதனால் அந்த நிலத்தை விடுவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மதக் கலவரத்தைத் தடுக்கவும்அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும் மத்திய அரசின் இம்மனுவைத் தள்ளுபடிசெய்கிறோம் என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தில் உண்மையிலேயே ராமர் கோவில் இருந்ததா என்பதைக்கண்டறிய அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில்உத்தரவிட்டது. அதன்படி அங்கு தற்போது அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன என்பதுநினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications