For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோவை விடுதலை செய்ய முடியாது: ஜெ. திட்டவட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரான வைகோவைவிடுதலை செய்ய இயலாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக பட்ஜெட் குறித்த விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. அப்போது வைகோ கைதுவிவகாரம் குறித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உறுப்பினரான சந்தானம் கேள்விஎழுப்பினார். அதற்கு ஜெயலலிதா பதில் அளிக்கையில்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொடா சட்டத்தின் கீழ்தான் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள், தமிழர் விடுதலைப் படை, தமிழர் மீட்சிப் படை என்பன உள்ளிட்ட மொத்தம்32 அமைப்புகளை மத்திய அரசு பொடா சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது.

இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்பை ஆதரித்து வைகோ பேசியதால்தான்வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட 42 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 41 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். பொடா சட்டத்தின் கீழ் மொத்தம் 8வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. பொடா வழக்குகளை விசாரிப்பதற்காகவேசென்னை-பூந்தமல்லியில் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பொடாசட்டத்தின் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்களை விடுதலை செய்யமுடியாது.

மேலும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வைகோ தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன முறைப்படிநடந்து வருகிறது. அதில் தமிழக அரசு தலையிடாது என்றார் ஜெயலலிதா.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X