கத்திக் குத்துப் பட்டும் ரவுடியைப் பிடித்த பெண் போலீஸ் அதிகாரி
சென்னை:
ரவுடி கத்தியால் குத்திக் காயப்படுத்தியபோதும் உயிரைப் பொருட்படுத்தாமல் துணிச்சலாகசெயல்பட்டு அவனை வளைத்துப் பிடித்தார் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர்.
வட சென்னையில் உள்ள பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர்ராஜேஸ்வரி. இந்தப் பகுதியில் ரவுடிகள் அட்டகாசம் அதிகம்.
அப்படிப்பட்ட ரவுடிகளில் ஒருவன்தான் செல்வம். பல கொலை முயற்சி வழக்குகள், திருட்டுவழக்குகளில் அவன் சம்பந்தப்பட்டிருந்தான். தலைமறைவாக இருந்த செல்வத்தைப் பிடிக்கபோலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் மயிலாப்பூர் பகுதியில் செல்வம் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.இதையடுத்து ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸ் படை அங்கு விரைந்தது.
ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு இடத்தில் வைத்து செல்வத்தை போலீஸார் மடக்கினர்.போலீஸாரைப் பார்த்த செல்வம், கையில் வைத்திருந்த கத்தியை எடுத்தான். ஆனால் சற்றும்கவலைப்படாத ராஜேஸ்வரி, செல்வத்தை நெருங்கிப் பிடிக்க முயன்றார்.
ஆனால் அவரது கையில் சரமாரியாக குத்தினான் செல்வம். இதையடுத்து அவரது கையிலிருந்துரத்தம் கொட்டத் தொடங்கியது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் செல்வத்தை மேலும்நெருங்கினார் ராஜேஸ்வரி.
கூடவே மற்ற போலீஸாரும் செல்வத்தை வளைத்துப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவன்காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டான்.
ராஜேஸ்வரி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
-->