ஆந்திராவில் பெப்சி நிறுவனம் மீது நக்சல்கள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
குண்டூர்:
ஈராக் மீது தாக்குதல் நடத்தப்படுவதை எதிர்த்து அமெரிக்காவின் பெப்சி நிறுவன கிடங்கின் மீது நக்சலைட்டுகள்பயங்கரத் தாக்குதல் நடத்தினர்.
ஆந்திர மாநிலம் பெடுகுரல்லா என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பெப்சிபாட்டில்கள் சிதறின. பின்னர் அந்த கிடங்குக்கு தீ வைக்கவும் முயன்றர். ஆனால், ஆயிரக்கணககான மக்கள்குவிந்ததால் அந்த இடத்தைவிட்டு நக்சல்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
10 நக்சலைட்டுகள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் நுழைந்து இந்தத் தாக்குதலை நடத்தினர்.
முன்னதாக அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிக்குமாறு மக்கள் போர்ப் படை நக்சலைட்டுகள் மக்களுக்குகோரிக்கை விடுத்தனர். ஏழை நாடுகளைத் தாக்கி அழிக்கும் அகங்கார அமெரிக்காவின் பொருள்களைபுறக்கணியுங்கள் என ஆந்திராவின் பல பகுதிகளிலும் இந்தப் படை நோட்டீஸ்களை ஒட்டியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications