ராஜாராமன் மர்ம கொலை: கமிஷனர் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழர் விடுதலைப் படை தலைவர் ராஜாராமன் சாவு தொடர்பாக யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கோபத்துடன்கூறியுள்ளார்.

கடந்த வாரம் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து சென்னை மத்திய சிறைக்குக்கொண்டுசெல்லப்படும் வழியில் ராஜாராமனைத் தப்பிக்க வைக்க தீவிரவாதிகள் நடத்தியமுயற்சியின்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து மனித உரிமை அமைப்புகளும், சில வழக்கறிஞர்களும் போலீசார் மீதுஅதிருப்தி அடைந்துள்ளனர். போலீசார்தான் ராஜாராமனைச் சுட்டுக் கொன்று விட்டு தப்ப வைக்கமுயற்சி என்று நாடகம் போடுவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் இன்று நிருபர்களிடம் விஜயகுமார் பேசுகையில்,

ராஜாராமன் சாவு குறித்து ஒவ்வொருவரும் ஒரு கருத்தைக் கூறி வருகின்றனர். ஆனால் காவல் துறைஇது தொடர்பான உண்மையை ஏற்கனவே விளக்கி தெளிவாகக் கூறிவிட்டது.

ஜனநாயகத்தில் கருத்துக் கூற ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் சிலர் காவல்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் நாங்கள் பதில் கூறிக் கொண்டிருக்க முடியாது. அதற்கான அவசியமும் காவல்துறைக்கு இல்லை.

எந்த இடத்தில் சொல்ல வேண்டுமோ அங்கு சொல்ல வேண்டிய நேரத்தில் நாங்கள் பதில் சொல்லிக்கொள்வோம் என்று ஆவேசத்துடன் கூறினார் விஜயகுமார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+