மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் வீரப்பன் நடமாட்டம்?
கோயம்புத்தூர்::
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் சந்தனக் கடத்தல் வீரப்பன்மறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து நூற்றுக்கணக்கான அதிரடிப் படை போலீஸார் அங்குமுகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகாசுரன் மலை, பில்லூர் அணை, செங்கைத் திட்டுஉள்ளிட்ட பல்வேறு மலைப் பகுதிகளில் அதிரடிப்படை வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.
சுமார் 300 வீரர்கள் அங்கு குவிக்கப்பப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் இரவிலும் ரோந்துப் பணிகள்தீவிரமாக நடக்கின்றன.
போலீஸாருக்குத் துணையாக பாக்ஸர் என்ற மோப்ப நாயும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. முகாம்கள்அமைத்து வீரப்பனின் நடமாட்டத்தை அதிரடிப் படை வீரர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்தத் தேடுதல் வேட்டையில் கர்நாடக அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்களாஎன்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.
-->