புதுவை மாணவி, 4 மாணவர்கள் 5ம் தேதி கலாமுடன் சந்திப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஒரு மாணவியும், 4 மாணவர்களும் வரும் 5ம் தேதிடெல்லியில் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமைச் சந்தித்து அவருடன் கலந்துரையாட உள்ளனர்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரும் நாடு முழுவதும் பல இடங்களுக்குச் செல்லும் டாக்டர்கலாம் அங்கு பள்ளி மாணவ, மாணவிகளைச் சந்திக்கத் தவறுவதே இல்லை.
அதேபோல் பல பள்ளி மாணவ, மாணவிகள் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கே சென்றுஅவரைச் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஒரு மாணவியும்,நான்கு மாணவர்களும் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று டாக்டர் கலாமுடன் கலந்துரையாடஉள்ளனர்.
இந்த மாணவி, மாணவர்களுடன் இரண்டு ஆசிரியர்களும் செல்கிறார்கள்.
அதே நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மாணவ, மாணவிகள் டெல்லி சென்றுடாக்டர் கலாமைச் சந்திக்க உள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications