அரசு மருத்துமனைகளில் கட்டண வார்டுகள் அமைக்க அரசு திட்டம்
சென்னை:
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் எலும்பு வங்கி தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலைதெரிவித்தார்.
சட்டசபையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து அவர் பேசுகையில்,
சென்னையில் தொடங்கப்படவுள்ள இந்த முதல் எலும்பு வங்கி மூலம் புற்றுநோய், தண்டுவட பாதிப்பு உள்ளிட்டபிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் எலும்புகள் வழங்கப்படும்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் இந்த எலும்பு வங்கி செயல்படும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காசு கொடுத்து சிகிச்சை பெறும் உயர் தர மருத்துவப் பிரிவுகளும் அமைக்கப்படும்.இதன் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சையை அரசு மருத்துவமனைகளில் குறைந்த செலவில் பெற வழிவகை செய்யப்படும்.
மாவட்டத் தலைநகரங்கள்தோறும் நர்சிங் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தில் உள்ள 5 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 315 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். இதற்காக ஐந்து கல்லூரிகளிலும்ரூ. 1 கோடி செலவில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
மாநிலத்தில் தற்போது தொழுநோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது. 10,000 பேருக்கு 2.8 பேருக்குமட்டுமே தற்போது தொழுநோய் உள்ளது. மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வுக் கல்வித் திட்டம்அமல்படுத்தப்படும்.
காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம் ரூ.20 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும். பள்ளிகளில்மாணவ, மாணவியருக்கு இருதய நோய் குறித்த மருத்துவ சோதனைகள் நடத்தப்படும். நோய் பாதிப்பு உள்ள மாணவர்களுக்குஉரிய சிகிச்சையும் அளிக்கப்படும்.
கண் தானம், உடல் தானத்தை ஊக்குவிக்க தான மையங்கள் அதிக அளவில் அமைக்கப்படும். உயிர் காக்கும் மருந்துகளை அரசுமருத்துவமனைகளில் குறைந்த விலையில் விற்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அமைச்சர் செம்மலை.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications