அமெரிக்கப் படைகளை கொல்ல பெண் தற்கொலை படைகள் தயார்
பாக்தாத்:
அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்த பெண் தற்கொலைப் படைகளும் தயாராகி வருகின்றன.
அதே போல நேற்று வட ஈராக்கில் கார் குண்டு வெடித்து 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு 2 பெண்தற்கொலைப் படையினர் தான் காரணம் என ஈராக் அறிவித்துள்ளது. கொல்லப்பட்ட அந்தப் பெண்களின்பெயர்கள் நுஷா மஜல்லி அல்- ஷம்மாரி, விதாத் ஜமீல் அல்-துலேமி என்றும் தெரியவந்துள்ளது. இதில் ஒருபெண் கர்ப்பிணியாவார்.
இதற்கிடையே ஈராக் போரில் உயிர் நீத்த பொது மக்கள் மற்றும் வீரர்களின் குடும்பங்களுக்கு தாராளமானநிதியுதவி வழங்குமாறு அதிபர் சதாம் ஹூசேன் உத்தரவிட்டுள்ளதாக துணை அதிபர் தாகா யாசின் ரமதான்தெரிவித்தார்.
அமெரிக்க குண்டு வீச்சில் வீடுகள் இடிந்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிதியுதவி தர சதாம் உத்தரவிட்டுள்ளார்.இதுவரை இந்தப் போரில் 844 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கத்து.
இதற்கிடையே சதாமைக் கண்டுபிடிப்பதைவிட ஈராக்கிடம் உள்ள பேரழிவு ஆயுதங்களைக் கண்டுபிடிப்பது தான்தங்களுடைய முக்கிய குறிக்கோள் என அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன. இதுவரை இந்த ஆயுதங்கள் எதையும்அமெரிக்கப் படைகள் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆயுதங்கள் இருப்பதாகக் கூறித்தான் ஈராக்கை அமெரிக்கா தாக்கி வருகிறது.
ஈராக்கில் இந்த ஆயுதங்கள் சிக்காவிட்டால், அமெரிக்கப் படைகளே இந்த ஆயுதங்களை அங்கு வைத்துவிட்டுஅவை ஈராக்குக்குச் சொந்தமானவை என பொய் சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது என ரஷ்யவெளியுறவுத்துறை அமைச்சர் இகார் இவானோவ் கூறியுள்ளார். இவர் இந்தப் போரை ரஷ்ய அதிபர் புடினை விடமிகக் கடுமையாகக் கண்டித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->