"சார்ஸ்": மலேசியாவில் பள்ளிகள் தொடர்ந்து மூடல்

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்:

"சார்ஸ்" நோய் அச்சம் காரணமாக மலேசியாவில் உள்ள பள்ளிகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

உலகையே அச்சுறுத்தி வரும் "சார்ஸ்" நோய் சீனாவில்தான் தோன்றியதாகத் தெரிய வந்துள்ளது.இதையடுத்து அங்கு உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் ஆராய்ச்சி நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் "சார்ஸ்" நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதுவரை 90க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். மேலும் சுமார் 2,500 பேர்இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"சார்ஸ்" நோய் அபாயம் காரணமாக சிங்கப்பூரில் 10 நாட்களுக்கு முன்பே அனைத்துப்பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் மலேசியாவில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10நாட்கள் வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் நேற்றுமட்டும் ஒரு டாக்டர், நர்ஸ் மற்றும் "சார்ஸ்" நோயாளி ஒருவரின் தாய் ஆகியோர் இந்நோயால்பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே கனடாவில் "சார்ஸ்" நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேவருகிறது. இதுவரை அங்கு 9 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த "சார்ஸ்" நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோயின் தன்மையை அறிந்துவிரைவில் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+