For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை: ரூ.35 லட்சம் ஹவாலா பணத்தை ஷார்ஜாவுக்கு கடத்த முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூரிலிருந்து ஷார்ஜா செல்லவிருந்த ஒரு பயணியிடமிருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ளஅமெரிக்க டாலரினாலான ஹவாலா பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த ஷரீப் காஜா மைதீன் என்பவர் கோயம்புத்தூர் வழியாக ஷார்ஜாவுக்குஹவாலா பணத்தைக் கடத்த முயற்சி செய்து கொண்டிருப்பதாக திருச்சி சுங்க அதிகாரிகளுக்குத்தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோயம்புத்தூர் விரைந்த அதிகாரிகள் ஷார்ஜா விமானத்தில் ஏறுவதற்காகச் சென்றுகொண்டிருந்த ஷரீப்பை சுற்றி வளைத்தனர்.

அவர்களைப் பார்த்ததும் ஷரீப் தப்பி ஓட முயற்சித்தான். ஆனால் அதிகாரிகளும் போலீசாரும்அவனை விரட்டிப் பிடித்தனர்.

பின்னர் அவனுடைய பைகளைச் சோதனையிட்டபோது, அதில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அமெரிக்கடாலர்கள் இருந்தது தெரிய வந்தது. செளதி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் பண நோட்டுக்களையும்அவன் வைத்திருந்தான்.

அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் ஷரீப்பைக் கைது செய்தனர். போலி பாஸ்போர்ட் மூலம்அவன் ஷார்ஜாவுக்குச் செல்ல முயற்சித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னையில் சமீப காலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஹவாலா பணம்கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X