ஸ்டிரைக் செய்த அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் "கட்"
சென்னை:
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அந்த ஒரு நாளுக்கானசம்பளத்தைக் கொடுக்கப் போவதில்லை என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்கள் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தம் செய்தால் "எஸ்மா" சட்டம் பாயும் என்ற அரசின் கடுமையான எச்சரிக்கையையும்மீறி அவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழக அரசின் தலைமைச் செயலகம் உள்ளிட்டபெரும்பான்மையான அரசு அலுவலகங்களில் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
தங்களுடைய அடையாள வேலைநிறுத்தம் முழு வெற்றி அடைந்து விட்டதாக அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மற்றும் நேற்று விடுப்பில் சென்ற அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்கான நேற்றைய சம்பளத்தைக் கொடுக்கப் போவதில்லை என தமிழக அரசுமுடிவு செய்துள்ளது.
இந்தத் தகவலை சில அரசு ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->