"சார்ஸ்" நோய்க்கு அடுத்த வாரம் மருந்து?
அட்லாண்டா (அமெரிக்கா):
சீனாவில் தோன்றிதாகக் கருதப்படும் "சார்ஸ்" நோய்க்கு அடுத்த வாரத்திற்குள் தடுப்பு மருந்துகண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் "சார்ஸ்" நோய்க்கு இதுவரை 100க்கும்அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 55 பேர் இறந்துள்ளனர்.
சீனாவிலிருந்து ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் பலஉயிர்களைப் பறித்துள்ளது இந்த "சார்ஸ்" நோய்.
இதற்கிடையே "சார்ஸ்" நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணி உலகெங்கிலும்தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்கு முன் "சார்ஸ்" நோய் எப்படித் தோன்றுகிறது என்பதைக்கண்டறியும் பணியிலும் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, சீனா மற்றும் அமெரிக்காவில் இது தொடர்பான ஆராய்ச்சிகள் வெகு வேகமாகநடைபெற்று வருகின்றன. "சார்ஸ்" நோயைப் பரப்பும் வைரஸைக் கண்டுபிடித்துள்ளதாக சீனவிஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த வைரஸை சில விலங்குகளின் உடம்பில்செலுத்தி ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன் பின்னர்தான் "சார்ஸ்" நோயைப் பரப்பும் வைரஸ்எது என்பது உறுதியாகத் தெரிய வரும்.
இந்த வைரஸ் எது என்று கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே "சார்ஸ்" நோய்த்தடுப்பிற்கான மருந்தைக் கண்டுபிடித்து விடுவோம் என அட்லாண்டா டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.
-->