For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல்கலை துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் தலைமையில் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மாநாடுசென்னையில் இன்று தொடங்கியது.

பல்கலைக்கழகங்களின் தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வருவது, நிதியாதாரங்களை ஒழுங்குமுறைப்படுத்துவது, கல்வி கற்பிப்பதில் சீர்திருத்தம் கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறுஅம்சங்கள் குறித்து விவாதிக்க தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ராமமோகன் ராவ்முடிவு செய்தார்.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் கலந்துகொள்ளும் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தத் துணை வேந்தர்கள் மாநாடு இன்று காலை சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் ராமமோகன் ராவ் தலைமையில் நடைபெறும் இந்தமாநாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் இன்னாசிமுத்து, அண்ணாபல்கலைக்கழகத் துணை வேந்தர் பாலகுருசாமி உள்பட 17 துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழக கல்வி அமைச்சர் செம்மலை, கல்வித் துறை செயலாளர் சுப்புராஜ் மற்றும் பல்வேறுமூத்த கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

இன்று மாலை வரை நீடிக்கும் இம்மாநாட்டில் பல்கலைக்கழகங்களின் பல்வேறு பிரச்சனைகள்குறித்து விவாதிக்கப்படுகிறது. பல முக்கியமான முடிவுகளும் எடுக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X