சென்னையில் மீனவர்கள் இடையே பயங்கர கோஷ்டி மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட பயங்கர கோஷ்டி மோதலில் 8 பேர் படுகாயம்அடைந்தனர்.

சென்னை-பெசன்ட் நகர் அருகே உள்ள ஓடைக் குப்பம் பகுதியில் ராமநாத் மற்றும் ஜெயபால்ஆகிய ரவுடிகளுக்கு இடையே அடிக்கடி கடும் மோதல் ஏற்படும்.

ஒவ்வொரு முறையும் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் அரிவாள், கத்தி, வேல், வாள், ஈட்டி போன்றபயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொள்வது வழக்கம்.

இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாத்தையும் ஜெயபாலையும் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டாலும் அவர்களுடைய ஆதரவாளர்கள் அடிக்கடி மோதிக்கொண்டிருந்தனர். இன்றும் அதேபோல் இரு தரப்பினரும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன்பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

ஒருவருக்கொருவர் சராமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொண்டனர்அவர்கள். இதனால் ஓடைக் குப்பம் பகுதியே போர்க்களம் போல் காணப்பட்டது.

இச்சம்பவத்தில் 8 பேருக்குப் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. அவர்கள் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகஉள்ளது.

இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஓடைக் குப்பம் பகுதியில்பெரும் பதற்றம் எழுந்துள்ளதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+