மே 9ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்
பெங்களூர்:
இந்தியாவிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் வரும் மே 9ம்தேதி ஜிசாட்-2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், அதாவது 2001ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி ஜிசாட்-1செயற்கைக்கோளை சுமந்து கொண்டு சென்ற ஜி.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட் அதை வெற்றிகரமாகவிண்ணில் செலுத்தியது.
அந்த வரிசையில் இரண்டாவது செயற்கைக்கோளான ஜிசாட்-2 வரும் 9ம் தேதி விண்ணில்செலுத்தப்பட உள்ளது.
இதற்குப் பின்னர் மேலும் ஒரு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டு விண்ணில் ஏவப்பட்டு பரிசோதனைசெய்யப்படும்.
அனைத்து சோதனைகளும் வெற்றிபெற்றால் இன்சாட் போன்ற தகவல் தொடர்புசெயற்கைக்கோள்கள் அனைத்தும் இந்தியாவிலிருந்தே ஏவப்படும். இதற்காக மற்ற நாடுகளை நாடவேண்டிய அவசியமில்லை என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) அதிகாரிகள்தெரிவித்தனர்.
கடந்த 10ம் தேதிதான் இந்தியாவின் இன்சாட்-3ஏ செயற்கைக்கோள் ஐரோப்பாவின் ஏரியன்-5ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது நினைவிருக்கலாம். இந்த செயற்கைக்கோள் தற்போதுவெற்றிகரமாக விண்ணில் வலம் வந்து கொண்டிருக்கிறது.