சார்ஸ்: சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
டெல்லி:
சார்ஸ் நோய் பயம் காரணமாக சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க இந்திய பைலட்கள் மறுத்து வருகின்றனர்.இதையடுத்து சிங்கப்பூருக்குச் செல்லும் விமானங்களை ஏர்- இந்தியா ரத்து செய்துள்ளது.
முதல் கட்டமாக டெல்லி- சிங்கப்பூர், ஹைதராபாத்- சிங்கப்பூர் இடையிலான சேவைகள் திங்கள்கிழமை முதல் ரத்துசெய்யப்படுகின்றன.
அதே போல சிங்கப்பூரில் இருந்து நீட்டிக்கப்படும் ஏர் இந்தியாவின் கோலாலம்பூர், ஜகார்த்தா விமானசேவைகளும் ரத்தாகின்றன.
இதனால் சிங்கப்பூருக்கு இந்தியாவில் இருந்து வாரம் 10 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட உள்ளது. இதுவரை14 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த 10 விமானங்களும் மும்பை மற்றும் சென்னையில் இருந்து மட்டுமேஇயக்கப்பட உள்ளன.
அதே போல இந்தியன் ஏர்லைன்சும் சிங்கப்பூர்- மும்பை, சிங்கப்பூர்- சென்னை விமானங்களை ரத்து செய்யஉள்ளதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்குக்கு விமானங்களை இயக்க பைலட்களும் இந்த விமானங்களில் பணியாற்றஏர்-ஹோஸ்டஸ்களும் மறுத்து வருகின்றனர். இதனால் விமான சேவைகளை ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு ஏர்இந்தியாவும், இந்தியன் ஏர்லைன்சும் தள்ளப்பட்டுள்ளன.
சீனாவில் புரளி:
இந் நிலையில் சிகரெட் குடித்தால் சார்ஸ் நோய் தாக்காது என்ற புரளி சீனாவிலும் ஹாங்காங்கிலும் பரவியுள்ளது.
இதனால் இந்த நாடுகளில் பலரும் தொடர்ந்து புகை பிடித்தவண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications