இந்திய-பாக். அமைதிக்காக கராச்சியில் இசை நிகழ்ச்சி
கராச்சி:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியும் நல்லுறவும் தழைத்தோங்க வலியுறுத்திகராச்சி நகரில் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இரு நாடுகளைச் சேர்ந்த பல முன்னணிப் பாடகர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பஞ்சாபைச் சேர்ந்த நாட்டுப்புறப் பாடகி ஆனைடா, பாகிஸ்தான் ராக் பாடகர் சல்மான் அகமதுஉள்ளிட்ட பிரபலமான பாடகர், பாடகிகள் இந்த சிறப்பு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியும், நல்லுறவும் மீண்டும் ஏற்பட வேண்டும்என்பதை வலியுறுத்தி இந்த இசை நிகழ்ச்சியில் பாடல்கள் பாடப்பட்டன.
சுமார் 2,000 பார்வையாளர்கள் இந்த சிறப்பு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் காஷ்மீரில் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தானுடன்மீண்டும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம் என்று கூறியுள்ள நிலையில் கராச்சியில் அமைதிக்கானஇசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications