இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திய- அமெரிக்க உறவில் புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைத்தவர் பிளாக்வில் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த இரு ஆண்டுகளாக இந்தியத் தூதராக இருந்த அவர் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவைஏற்படுத்தினார்.

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாத்தை அவ்வப்போது நேருக்கு நேராக விமர்சித்து வந்தார். பிரதமர்வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, அமைச்சர்கள் ஜஸ்வந்த் சிங், யஷவந்த் சின்ஹா, ஜார்ஜ் பெர்னாண்டஸ்ஆகியோருக்கு மிக நெருக்கமானவராக இருந்தார்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சின் தனிப்பட்ட நண்பர்களில் ஒருவர் பிளாக்வில்

64 வயதான ராபர்ட் பிளாக்வில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளார்.இதற்காகவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் எப். கென்னடி ஸ்கூலில் பணிபுரியத் திட்டமிட்டுள்ளேன். எனது ராஜினாமாமுடிவை கடந்த ஜனவரியிலேயே அதிபர் புஷ்ஷிடம் தெரிவித்துவிட்டேன். இந்தியாவில் தூதராகப் பணியாற்றியதுஎன் வாழ்வில் மறக்க முடியாத காலகட்டமாகும். இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு எதிர்காலத்தில் மேலும்வலுப்படும். மிக நல்ல எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

பில் கிளின்டனின் காலத்தில் தூதராக இருந்த ரிச்சர்ட் செலஸ்டி, புஷ் அதிபரானவுடன் நீக்கப்பட்டார். அவருக்குப்பதிலாக தனது நண்பர் ராபர்ட் பிளாக்வில்லை இந்தியத் தூதராக புஷ் நியமித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+