For Daily Alerts
Just In
சேலத்தில் தொட்டில் குழந்தை சாவு
சேலம்:
சேலத்தில் தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டு வந்த குழந்தை உடல்நிலைசரியில்லாமல் திடீரென்று இறந்தது.
சேலம்-செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்றபெண்ணுக்கு கடந்த மாதம் பெண்குழந்தை பிறந்தது.
ஆனால் அந்தக் குழந்தையை விரும்பாத அவர் சேலத்தில் உள்ள அரசுத் தொட்டில் குழந்தைகள்திட்டத்தில் சேர்த்து விட்டுச் சென்றார்.
இந்நிலையில் காப்பகத்தில் வளர்க்கப்பட்டு வந்த தொட்டில் குழந்தை உடல் நிலை சயில்லாமல்இறந்து விட்டது.
குழந்தையின் இறந்த உடலை ஒப்படைப்பதற்காக வளர்மதி கொடுத்த முகவரியைத் தொடர்புகொண்டபோது அது போலியான முகவரி என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து இறந்து போன் அந்தக் குழந்தையின் உடல் தற்போது சேலம் அரசுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
-->
Story first published: Monday, April 21, 2003, 5:30 [IST]