நாமக்கல்லில் அழுகி வரும் 7 கோடி முட்டைகள்
நாமக்கல்:
லாரிகள் வேலைநிறுத்தம் தொடருவதால் நாமக்கல்லில் சுமார் 7 கோடி முட்டைகள் அழுகும்நிலையில் தேங்கிக் கிடக்கின்றன.
நாமக்கல்லில், தினசரி சுமார் 1.25 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. விரைவில் அழுகி விடும்பொருள் என்பதால், தினசரி உற்பத்தியாகும் முட்டைகள் அன்றைக்கே விற்றுவிடப்படும்.
ஆனால் தற்போது லாரிகள் ஸ்டிரைக் நடந்து வருவதால் முட்டைகளை விற்க முடியாமல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திண்டாடி வருகின்றனர்.
தீவனம் இல்லாத காரணத்தால் தினமும் ஆயிரக்கணக்கான கறிக் கோழிகள் ஒரு பக்கம் செத்துக்கொண்டிருக்கின்றன. மறுபக்கம் சுமார் 7 கோடி முட்டைகள் அழுகும் நிலையில் வீணாகிக்கொண்டிருக்கின்றன.
தற்போது போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 2.5 கோடி முட்டைகள் வேன்கள் மற்றும் லாரிகள் மூலம்பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இன்று மீண்டும் சில கோடி முட்டைகள் அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->