டெல்லி ஜவஹர்லால் பல்கலை.யில் தமிழ் பிரிவு: தமிழக அரசு ரூ. 50 லட்சம் உதவி
சென்னை:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் பிரிவை (Tamil chair) உருவாக்க ரூ. 50 லட்சம்வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இன்று சட்டமன்றத்தில் இதனை ஜெயலலிதா தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழ் ஆராய்ச்சிக்கு ஊக்கம் தரும்வகையில் இந்த நிதியை ஒதுக்க அரசு முன்வந்துள்ளது.
2000ம் ஆண்டிலேயே திமுக ஆட்சியில் இருந்தபோதே தமிழ் பிரிவை உருவாக்க ஜவஹர்லால் நேருபல்கலைக்கழகம் முன் வந்தது. அது தொடர்பாக முதல்வராக இருந்த கருணாநிதியிடமும் பல்கலைக்கழக நிர்வாகிகள்பேசினர்.
ஆனால், கருணாநிதி வெறும் ரூ. 10 லட்சம் மட்டுமே வழங்க முன் வந்தார். இதனால் தமிழக அரசின் உதவியைஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நிராகரிச்சுவிட்டது. இது தான் திமுகவின் தமிழ் பற்று, கருணாநிதிக்கு உள்ளதமிழ் பற்று.
இப்போது ரூ. 50 லட்சம் ஒதுக்க நாங்கள் முன் வந்துள்ளோம். தமிழை செம்மொழியாக (classical language)அறிவிக்குமாறு மத்திய அரசை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார் ஜெயலலிதா.
-->












Click it and Unblock the Notifications