முன்னாள் அமைச்சரின் உறவினர்கள் படுகொலை: நகைகள், பணம் கொள்ளை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் முன்னாள் திமுக அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் 2 நெருங்கிய உறவினர்கள்கொள்ளையர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டிலிருந்த நகைகள்,பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்-கணபதிபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி மற்றும் ராஜலட்சுமி என்ற தம்பதிதனியாக வசித்து வந்தனர். இவர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசனின் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.
இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8 மணிக்கு இவர்களது வீட்டுக்கு வந்த ஒரு கும்பல் இருவரையும்துடிக்கத் துடிக்க அடித்து, பின்னர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தது.
அதன் பிறகு வீட்டில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பிவிட்டது.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணைநடத்தினர். மூத்த போலீஸ் அதிகாரிகளும் நேரில் வந்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடியகொள்ளைக் கும்பலைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->