சென்னையில் 3000 லாரிகளில் குடிநீர் விநியோகம்
சென்னை:
சென்னையில் கோடைக்கால குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக 3000 லாரிகளில் குடிநீர்விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்து வரும் புது வீராணம் திட்டப் பணிகளைப் பார்வையிட்ட அவர் நிருபர்களிடம்கூறுகையில்,
புது வீராணம் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு மே மாதத்தில்இந்தப் பணிகள் முடிவடையும்.
சென்னையில் தற்போது 2000 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. வரும் மேமாதத்திலிருந்து இந்த லாரிகளின் எண்ணிக்கை 3000மாக அதிகரிக்கப்படும்.
நகரில் தற்போது 2600 தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 600 தொட்டிகள் வைக்கமுடிவு செய்துள்ளோம்.
சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடாத அளவுக்கு அரசு தேவையானநடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் சம்பத்.
-->