விரைவில் தமிழகத்தில் 1,008 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்
சென்னை:
தமிழகத்தில் 1,008 கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமிதெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ராசியான எண் 9 என்பதால் அந்தக் கூட்டுத் தொகை வரும் வகையில் 1,008 கோவில்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, 1,008 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டசபையில் இந்து அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கைகளை சமர்பித்து அமைச்சர் பேசுரையில்,
2003-04க்குள் 1008 கோவில்களில் புனரமைப்புப் பணிகள்முடிந்து விடும். அதன் பிறகு அந்தக் கோவில்களுக்கு கும்பாபிஷேகம்நடத்தப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும், ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கையைஅரசு எடுத்து வருகிறது.
மொத்தம் 94 கோவில்களில் அனைத்து கால பூஜைகளையும் மேற்கொள்ளஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொருளாதாரரீதியில் நல்லநிலையில் உள்ள 37 கோவில்களின் வருமானத்தை எடுத்து இந்த 94 கோவில்களிலும் அனைத்து கால பூஜைகளுக்குத் தேவையான நிதிவழங்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மகாமகம் விழாவை ரூ. 1 கோடி செலவில் நடத்த அரசுதிட்டமிட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வராமல், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் இருக்கும் 250 கோவில்களுக்குதலா ரூ. 25,000 நிதியுதவி வழங்கப்படும் என்றார்.
-->