அரசு பஸ்களில் தமிழ் பதிவு எண்கள் அழிப்பு: 2 அதிகாரிகள் சஸ்பெண்டு

Subscribe to Oneindia Tamil

கரூர்:

கரூர் அரசு பஸ்களில் தமிழ் பதிவு எண்களை அழித்து விட்டு ஆங்கிலத்தில் மட்டுமே பதிவுஎண்களை எழுத ஏற்பாடு செய்த 2 போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தற்காலிகப் பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.

பொதுவாக தமிழகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அனைத்து அரசு பஸ்களிலுமே தமிழ் மற்றும்ஆங்கிலத்தில் அவற்றின் பதிவு எண்கள் எழுதப்பட்டிருக்கும்.

இந்நிலையில் கரூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள சில பஸ்களில் சமீபத்தில் தமிழில்எழுதப்பட்டிருந்த பதிவு எண்கள் அழிக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாக ஆங்கிலத்தில் மட்டுமேபதிவு எண்கள் எழுதப்பட்டிருந்தன.

இதற்கு கரூரில் உள்ள தமிழ் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாகதமிழக அரசிடம் புகார் ஒன்றையும் அவர்கள் கொடுத்தனர்.

விசாரணையில், கரூர் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளான கிருஷ்ணமூர்த்தி மற்றும்நடராஜன் ஆகியோர்தான் இவ்வாறு ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு எண்களை எழுதஉத்தரவிட்டதாகத் தெரிய வந்தது.

இதையடுத்து அந்த 2 அதிகாரிகளையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்ய தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+