டெல்லி தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு: அதிமுக கோரிக்கை
டெல்லி:
டெல்லியில் உள்ள தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடுகள் மறுக்கப்படுவதாகவும்இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.மலைச்சாமி கோரிக்கை விடுத்தார்.
மலைச்சாமி நேற்று மக்களவையில் பேசுகையில்,
மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியல் மாநிலவாரியாகத்தான் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குச்சென்று குடியேறுபவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படகின்றனர்.
புதிதாக அவர்கள் குடியேறியுள்ள மாநிலத்தின் இட ஒதுக்கீட்டுப் பட்டியலிலும் அவர்களுடைய ஜாதிஇருந்தால் மட்டுமே அவர்கள் அதை அனுபவிக்க முடியும்.
இதனால் டெல்லியில் குடியேறியுள்ள ஏராளமான தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழத்தின் இடஒதுக்கீட்டுப் பட்டியலில் உள்ள பல ஜாதிகள், டெல்லி பட்டியலில் காணப்படவில்லை.
ஒரு மாநிலத்திலிருந்து மக்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்று குடியேறுவது வழக்கமானஒன்றுதான். அதுபோலவே தமிழகத்திலிருந்தும் ஏராளமான தமிழர்கள் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் குடியேறி உள்ளனர்.
ஆனால் அங்கு தங்களுக்குக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு கிடைக்காமல் டெல்லித் தமிழர்கள்அவதிப்பட்டு வருகின்றனர்.
இதே போலத்தான் ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் லட்சக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதைத் தேசியப் பிரச்சனையாகக் கருத்தில் கொண்டு மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலில் டெல்லித் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு இடைக்காலத் தீர்வு ஒன்றை மத்திய அரசுகொண்டுவர வேண்டும் என்றார் மலைச்சாமி.
-->